2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் சாவு


2-வது மாடியில் இருந்து   தவறி விழுந்து சிறுவன் சாவு
x

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானார்கள்.

பெங்களூரு: பெங்களூரு உலிமாவு போலீஸ் எல்லைக்குட்பட்ட காளேன அக்ரஹாரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 2-வது மாடியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகன் ஆதித்(வயது 12). தனியார் பள்ளியில் படித்து வந்தான். சிறுவனின் தந்தை சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார்.

தாய் மற்றும் சிறுவன் மட்டுமே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் 2-வது மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஆதித் திடீரென்று கால் தவறி கீழே விழுந்தான். இதில் ஆதித்தின் தலை, மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த விபத்து குறித்து உலிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.


Next Story