கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவரின் ஜாமீன் மனு தள்ளுபடி


கவுரி லங்கேஷ் கொலையில்   கைதானவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பெங்களூரு: பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசித்து வந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மராட்டியத்தை சேர்ந்த கிரிகேஷ் தேவ்திகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இந்த நிலையில் ஜாமீன் கேட்டு கிரிகேஷ் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் கிரிகேஷ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கைது செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் தன் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த மனு மீது நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை மனுதாரர் கைது செய்யப்படுவதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று கூறி கிரிகேசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.


Next Story