சிறுமி பலாத்கார வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது


சிறுமி பலாத்கார வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 6:45 PM GMT)

சிறுமி பலாத்கார வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பீரூர் அருகே உள்ள பக்கவள்ளி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஆண்டு (2022) அதே பகுதியை சேர்ந்த வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பீரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது நீதிபதி தேவைப்படும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் கடூர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது பிரதாப்பிற்கு நீதிபதிகள் நேரில் ஆஜராகும்படி 2 நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட்டு பிரதாப்பை கைது செய்து ஆஜர் படுத்தும்படி பீருர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து பீருர் போலீசார் பிரதாப்பை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் பிரதாப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் பிரதாப்பை சிறையில் அடைத்தனர்.


Next Story