கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல்!


கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல்!
x

இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, மறைந்த பத்திரிகையாளர்கள் 35 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் நல நிதியிலிருந்து 7 பத்திரிகையாளர்கள் மற்றும் 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

இதில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த 16 பத்திரிகையாளர் குடும்பங்களும் அடங்குவர். இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.

இதுதவிர, நிரந்தர உடல் திறன் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட 2 பத்திரிகையாளர்கள் மற்றும் பெரிய நோய்களுக்கு சிகிச்சை பெறும் 5 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மொத்தம் ரூ.1.81 கோடி நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளவர்களையும் சேர்த்து 139 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.


Next Story