மின்சார நெடுஞ்சாலைகளை மேம்படுத்த அரசு பணியாற்றி வருகிறது - நிதின் கட்கரி


மின்சார நெடுஞ்சாலைகளை மேம்படுத்த அரசு பணியாற்றி வருகிறது - நிதின் கட்கரி
x

மின்சார நெடுஞ்சாலைகளை உருவாக்குவதற்காக அரசாங்கம் பணியாற்றி வருவதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தோ-அமெரிக்கன் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது- "இந்தியாவின் பொது போக்குவரத்து முறையை மின்சாரமயமாக்க அரசு விரும்புகிறது. சூரியசக்தி மற்றும் காற்றாலை ஆற்றல் மூலம் செயல்படும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வழிமுறைகளை அரசு வலுவாக ஊக்குவித்து வருகிறது.

மின்சார நெடுஞ்சாலைகளை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம், அவை சூரிய சக்தியால் இயக்கப்படும், மேலும். இது கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை இயக்கும் போது சார்ஜ் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

சுங்கச்சாவடிகளை சூரிய சக்தி மூலம் இயக்குவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. போக்குவரத்து அமைச்சகம் முக்கிய வழித்தடங்களில் சாலைகளை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை நடத்தி உள்ளது மற்றும் புதிய சீரமைப்புகளை உருவாக்கி உள்ளது.

நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பு பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்துகிறது. இதனால் புதிய தொழில்களை உருவாகிறது. இதன் காரணமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குகிறது." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story