தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மைசூரு:

கள்ளக்காதல்

மைசூரு மாவட்டம் உன்சூர் டவுனை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). கூலி தொழிலாளி. இவருக்கும், நேத்ரா என்ற பெண்ணிற்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேத்ரா உன்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேத்ராவிற்கு தொழிற்சாலையில் தன்னுடன் வேலை பாா்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுகுறித்து நேத்ராவின் கணவர் சுரேஷ்குமாருக்கு தெரியவில்லை என தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நேத்ரா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரவில்லை. அவர் தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை சுரேஷ்குமார் தொழிற்சாலைக்கு சென்று தேடிபாா்த்தார். அப்போது தான் அவருக்கு கள்ளக்காதல் குறித்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமார், தனது பிள்ளைகளுடன் உன்சூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேத்ராவை தேடிவந்தனர்.

இதையடுத்து போலீசார் நேத்ராவை சிவமொக்கா நகரில் கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு சுரேஷ்குமாருடன் வாழ விரும்பமில்லை என்றும், மேலும் தான் வாலிபர் ஒருவருடன் மறுதிருமணம் செய்து கொண்டாகவும் கூறியுள்ளார். இதைகேட்டு மனமுடைந்த சுரேஷ்குமார் வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து உன்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரித்தனர்.

வழக்குப்பதிவு

விசாரணையில் நேத்ரா, தனது கணவரையும், பிள்ளைகளையும் விட்டு கள்ளக்காதலனுடன் சென்று மறுமணம் செய்து கொண்டார். அதற்காக புகைப்படத்தை சுரேஷ்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைபார்த்து அவர் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என சுரேசின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். போது உயிரிழந்த சுரேஷ்குமாரின் குழந்தைகள் அவரது பெற்றோர் வீட்டில் உள்ளனர்.


Next Story