அரியானா: பஸ் கவிழ்ந்து விபத்து- 6 பேர் காயம்


அரியானா: பஸ் கவிழ்ந்து விபத்து- 6 பேர் காயம்
x

Image Courtesy: ANI 

அரியானாவில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனா்.

சோலன் ,

சிம்லாவில் இருந்து சண்டிகரை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்டவா்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில், சோலன் மாவட்டத்தில் உள்ள பர்வானூவ் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்.விபத்தில் காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story