ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை "இந்திய பொருளாதாரத்தின் மீது தாக்குதல்" - அதானி குழுமம்


ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீது தாக்குதல் - அதானி குழுமம்
x

பங்குசந்தைகளில் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சுத்த பொய் என்று அதானி குழுமம் மறுத்துள்ளது.

புதுடெல்லி

ஹின்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால், அதானி குழும நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதேபோல் உலக பெரும்கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார்.

இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டுள்ள 413 பக்க அறிக்கையில், ஹிண்டன் பர்க்கின் அறிக்கை நன்கு ஆய்வு செய்யப்பட்டது அல்ல என்றும், அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் யார்...?

ஹிண்டன்பர்க் யார் என்று கேட்டால், ஒரே வார்த்தையில் அது ஒரு தடயவியல் நிதி ஆராய்ச்சி நிறுவனம் என்று சொல்லலாம். அவர்கள் தனியார் நிதி துப்பறியும் நபர்கள், அவர்கள் உலகம் முழுவதும் சென்று விசாரித்து அறிக்கைகளைத் தயாரிக்கிறார்கள், உலகின் பல ஜாம்பவான்களை மண்டியிட வைத்து உள்ளனர்.

இவர்கள் பங்குச் சந்தையை சிதைக்கும் அறிக்கை மூலம் தலைப்புச் செய்திகளை உருவாக்கும் ஒரு உளவு நிறுவனம், அதன் பெயரை பலூன் ஏர்ஷிப் ஹிண்டன்பர்க் என்பதிலிருந்து எடுத்தது.

ஜெருசலேமில் சர்வதேச வணிக மேலாண்மை பட்டதாரி நாதன் ஆண்டர்சன் (38), என்பவர் தான் இந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியைத் தொடங்கினார்.

இவர்களின் உளவு வேலை 'ஆக்டிவிஸ்ட் ஷார்ட்செல்லிங்' என்று அழைக்கப்படுகிறது. விலை குறையும் போது மீண்டும் வாங்கும் நோக்கத்தில் வைத்திருக்காத பங்குகள் விற்கப்படுகின்றன. ஆண்டர்சனுக்கு ஜெருசலேமில் உள்ளூர் ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிந்த அனுபவம் இருந்தது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் அமெரிக்காவில் குடியேறினார். பேக்ட்செட் என்ற நிதி மென்பொருள் நிறுவனத்தில் ஆலோசகராக பணியை தொடங்கினார்.

ஹிண்டன்பர்க் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு, உலகின் பல நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய மார்கோபவுலோஸுடன் ஆண்டர்சன் நெருக்கமாக பணியாற்றினார். பல பங்கு ராட்சதர்களை மண்டியிடச் செய்த மார்கோபவுலோசிடம் அவர் பல் அம்சங்களை கற்றுக்கொண்டார்.

ஹிண்டன்பர்க் 2017 இல் நிறுவப்பட்டது. நிறுவனங்களின் தவறுகள், முறைகேடுகள், குறித்து விளக்கி அறிக்கை தயாரிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் பந்தயம் கட்டி லாபம் ஈட்டும். கணக்கியல் முறைகேடுகள், தவறான நிர்வாகம் மற்றும் வெளியிடப்படாத தொடர்புடைய பரிவர்த்தனைகளை இந்த இணையதளம் வெளிப்படுத்துகிறது.

இவர்கள் மீது அமெரிக்காவில் வழக்கு உள்ளது. அமெரிக்க நீதித்துறையில் ஒரு மோசடி வழக்கு உள்ளது.எலக்ட்ரிக் டிரக் தயாரிப்பாளரான நிக்கோலா கார்ப்பரேஷனுக்கு எதிராக அவர்கள் செப்டம்பர் 2020 இல் வெளியிட்ட அறிக்கை அவர்களை பிரபலமாக்கியது.

ஹிண்டன்பர்க் 2017 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 16 நிறுவனங்களை தவறு செய்ததற்காக அடையாளம் கண்டுள்ளது என்று அதன் இணையதளம் தெரிவித்துள்ளது

டுவிட்டரை எலோன் மஸ்க் கையகப்படுத்தியது தொடர்பான சில முரண்பாடுகளையும் ஹிண்டன்பர்க் சுட்டிக்காட்டினார்.

அதானி குழுமம் இறுதியாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கணக்கியல் மற்றும் கார்ப்பரேட் ஆளுமை அமைப்புகளில் உள்ள கடுமையான சிக்கல்களைக் கூறிஉள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் எட்டு ஆண்டுகளில் ஐந்து தலைமை நிதி அதிகாரிகளை மாற்றி உள்ளது இது கணக்கியல் சிக்கல்களின் அறிகுறியாகும். குழுமத்தில் உள்ள ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகள் சரிந்தாலும், பங்கு விலை உயர்த்தப்பட்டு, அதானி குழும பங்குகள் அதிக அளவில் வர்த்தகமாகி வருகின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கையில் 88 கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு அதானி குழுமம் தற்போது பதில் அளித்து உள்ளது.


Next Story