சிவமொக்கா டவுனில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் தொய்வு


சிவமொக்கா டவுனில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் தொய்வு
x
தினத்தந்தி 12 Oct 2022 7:00 PM GMT (Updated: 12 Oct 2022 7:01 PM GMT)

சிவமொக்கா டவுனில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

சிவமொக்கா;


சிவமொக்கா டவுனில் சீர்மிகு திட்டப்பணிகள் (ஸ்மார்ட் சிட்டி) கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருவதாக பல புகார்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வந்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில் டவுன் பகுதியில் பி.எச்.சாலை கார்டன் பகுதியில் உள்ள 3-ம் குறுக்கு சாலையில் கடந்த 6 மாதமாக நிலத்தடி மின்கேபிள்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால் அந்த பணிகள் இன்றுவரை நிறைவடையாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெரிதும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து அந்த கடைகளின் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும் அந்த பகுதியில் கேபிள்கள் நடைபாதையில் போடப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


Next Story