கணவர் குடும்பத்தினர் தொல்லையால் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை


கணவர் குடும்பத்தினர் தொல்லையால் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
x

கணவர் குடும்பத்தினர் தொல்லையால் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு ஜோகுபாளையா பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கும், திவ்யா என்ற ஐ.டி. நிறுவன பெண் ஊழியருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல், திவ்யாவை, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இதேபோல் சம்பவத்தன்றும் அவர்கள் அனைவரும் திவ்யாவுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திவ்யா, அவரது வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்சூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தினர். அப்போது கணவர் மற்றும் குடும்பத்தினர் தொல்லை தாங்காமல் திவ்யா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக திவ்யாவின் கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story