ஜம்மு-காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு


ஜம்மு-காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு
x

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான் என்ற பகுதி நோக்கி இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர். சாஜியன் பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிராரி நல்ஹா என்ற பகுதியில் சாலையில் சென்றபோது எதிபாராத விதமாக பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், ராணுவம், உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

பூஞ்ச் ​​பகுதியில் நடந்த விபத்தில் உயிர் இழப்பு வருத்தமளிக்கிறது. எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story