பானிபூரி சாப்பிட்ட 40 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு


பானிபூரி சாப்பிட்ட 40 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு
x

கோப்புப்படம் 

ஜார்கண்டில் ரோட்டோர கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்ட 40 குழந்தைகள் மற்றும் 10 பெண்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா மாவட்டம் கோசைன் தோலாவில் பகுதியில் ரோட்டோர கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்ட அந்த பகுதியை சேர்ந்த 40 குழந்தைகள் மற்றும் 10 பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் கோடெர்மாவில் உள்ள சதர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் அனைவரும் 9 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். தற்போது குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது.

பானிபூரி வியாபாரியிடம் இருந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாதிரிகள் சோதனைக்காக ராஞ்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story