மனைவியை கொன்று புதைத்துவிட்டு காணவில்லை என்று நாடகமாடிய நபர் கைது


மனைவியை கொன்று புதைத்துவிட்டு காணவில்லை என்று நாடகமாடிய நபர் கைது
x

மனைவியை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என்று நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கிரிதிஹ்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என்று நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ் பரன்வால் என்ற நபர் 2021-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி முதல் தனது மனைவியை காணவில்லை, அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி போலீசில் புகாரளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மனிஷிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரே தனது மனைவியை கொன்றது தெரியவந்துள்ளது. மனைவியைக் கொன்று தனது நண்பரின் வீட்டில் உடலை புதைத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் மனிஷை இன்று கைது செய்தனர்.

உடலின் பாகங்களை சம்பவ இடத்திலிருந்து மீட்ட போலீசார் டிஎன்ஏ பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.


Next Story