ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை


ஆற்றில் குதித்து   கல்லூரி மாணவி தற்கொலை
x

ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

கலபுரகி: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா குண்டுகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (வயது 21). இவர் கலபுரகியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் கலபுரகியில் உள்ள ஆற்று பாலத்துக்கு ஸ்கூட்டரில் வந்த பாக்யஸ்ரீ, ஸ்கூட்டரை பாலத்தில் நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் குதித்தார்.

இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கலபுரகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story