பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி குத்திக்கொலை- போலீசார் தீவிர விசாரணை


பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி குத்திக்கொலை- போலீசார் தீவிர விசாரணை
x

பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூர்,

கர்நாடக மாநில அரசின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பிரதிமா என்ற பெண் அதிகாரி பதவி வகித்து வந்தார். 45 - வயதான பிரதிமா, தனது கணவர் மற்றும் மகனுடன் பெங்களூர் நகரம் சுப்ரமணியபோரா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 8 வருடங்களாக அங்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு பிரதிமாவின் கணவரும் மகனும் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதிக்கு சென்றுள்ளனர். வீட்டில் பிரதிமா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

நேற்று இரவு, பிரதிமாவின் சகோதரர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார். பலமுறை முயற்சித்தும் பிரதிமா போனை எடுக்கவில்லை. இதனால், பதறிப்போன சகோதரர் இன்று காலை பிரதிமாவை காண நேரடியாக அவரது வீட்டிற்கே வந்தார். அப்போது உடலில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்த நிலையில், பிரதிமா கிடந்தார். அவரது சடலத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து சகோதரர் உடனடியாக காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடயவியல் துறையினரும் பிரதிமாவின் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தீவிரமாக ஆய்வு செய்தனர். கர்நாடகாவில் பெண் உயரதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story