கருணாநிதி நினைவு தினம்: டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை..!


கருணாநிதி நினைவு தினம்: டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை..!
x
தினத்தந்தி 7 Aug 2023 9:27 AM GMT (Updated: 7 Aug 2023 10:02 AM GMT)

கலைஞர் நினைவு நினைவு தினத்தையொட்டி டெல்லியில் அவரது படத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரணி நிறைவில் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினத்தையொட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது திமுக எம்.பி. திருச்சி சிவா உடனிருந்தார்.


Next Story