சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி 9 துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கேரள கவர்னர் 'கெடு'


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி 9 துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கேரள கவர்னர் கெடு
x

கேரள மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜஸ்ரீ நியமனத்தை ரத்து செய்து, கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளுக்கு புறம்பாக நியமனம் நடந்ததாக கூறியுள்ளது.

இந்தநிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி, அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்குள், அவர்களின் ராஜினாமா கடிதங்கள் தனக்கு வந்துசேர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story