ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் நூதன போராட்டம்


ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் நூதன போராட்டம்
x

BY RIJAS SIDDHIK AND AUSTIN J/INSTAGRAM

ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் டவுடர் பனியனுடன் போட்டா வெளியிட்டு போராட்டம்

கோழிக்கோடு

ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள ஐகோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் குழு (பாலியல் துன்புறுத்தலுக்காக பெண்களின் ஆடைகள் மீது பழி போடும் பெண் வெறுப்பை எதிர்த்து புகைப்படம் வெளியிட்டு எதிர்ப்பை காட்டி உள்ளனர்.'

ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு


"உங்கள் எண்ணங்கள் அல்லது எங்கள் உடலின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை என்பதற்காக என்னை 'வெட்கமற்றவர்' அல்லது 'அதைக் கேட்பது' எனக் குறியிடாதீர்கள்,என்று மருத்துவ மாணவி ஆன்சி ஷாஜூவின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தின் தலைப்பு கூறுகிறது.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஒரு மாணவ முயற்சியான விமன் இன் கேம்பஸின் (WINCA) இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷார்ட்ஸ், கிராப் டாப்ஸ் மற்றும் ஷேர் பேப்ரிக் போன்ற ஆடைகள் அணிந்த நான்கு மாணவவிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் மாணவிகள் ராதிகா தீஜூ, ஆன்சி ஷாஜூ, ஸ்ரீனிமா, ஸ்ரீலட்சுமி பிரகாஷ், பியோனா ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் அதில் ஆடைகளை நமது சமூகத்தில், பெண்கள் வெளிப்படையான ஆடைகளை அணிவதற்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள், ஆனால் ஆண்களை பாலியல் கொடுமைகளை நிறுத்தக் கற்றுக்கொடுக்கவில்லை. பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை மறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஆனால் ஆண்களுக்கு பெண்களின் சம்மதத்தை மதிக்கக் கற்பிக்கப்படுவதில்லை" என்று கூறப்பட்டு உள்ள


Next Story