ராமர்கோவில் கும்பாபிஷேக விழா: அத்வானி பங்கேற்பாரா? விஷ்வ இந்து பரிஷத் பதில்


ராமர்கோவில் கும்பாபிஷேக விழா: அத்வானி பங்கேற்பாரா? விஷ்வ இந்து பரிஷத் பதில்
x

கோப்பு படம்

தினத்தந்தி 11 Jan 2024 12:02 PM GMT (Updated: 11 Jan 2024 12:04 PM GMT)

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேற்று வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி இல்லம் சென்ற விஷ்வ ஹிந்துபரிஷத் அமைப்பின் அலோக் குமார், ஆர்.எஸ். எஸ். அமைப்பின் கிருஷ்ண கோபால், மற்றும் ராம்லால் ஆகியோர் விழா அழைப்பிதழை அத்வானியிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அலோக்குமார் கூறியதாவது:- ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதாக அத்வானி கூறியிருக்கிறார். தேவைப்பட்டால் அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்வோம். முரளி மனோகர் ஜோஷி வருவதற்கு முயற்சி செய்வதாக கூறியிருக்கிறார்" என்றார்.

ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார். 1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடைகளை எதிர்கொண்டு, ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வாதிட்டவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story