எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு தர்ம அடி...!


எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு தர்ம அடி...!
x
தினத்தந்தி 19 Oct 2022 7:27 AM GMT (Updated: 19 Oct 2022 7:32 AM GMT)

ஹைதராபாத்தில் 4 வயது எல்கேஜி சிறுமிக்கு பள்ளி முதல்வரின் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத்

ஐதராபாத் பஞ்சாரா கில்ஸ் பகுதியில் உள்ள் நர்சரி பள்ளியில்

பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்துள்ள ஆய்வகத்தில் நான்கு வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையும், கடந்த இரண்டு மாதங்களாக அவள் மனமுடைந்து அழுது கொண்டிருப்பதையும் கவனித்த பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை கூறிஉள்ளார். மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சிறுமி குற்றம் செய்தவரை சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து பெற்றோர் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்தனர்குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்தனர பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர் அவரை போலீசில் பிடித்து கொடுத்தனர்.

கைது செய்யபட்டவர் பெயர் ரஜினி குமார். இவர் பள்ளியில் ஆய்வகங்களை பராமரித்தல் மற்றும் ஊழியர்களுக்கான வேலைகளை செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவந்தார்.

ரஜினி மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது மற்ற பெற்றோர்களும் ரஜினி குறித்து முதல்வரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தற்போது விசாரணை நடத்தபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story