காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்


காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல்
x
தினத்தந்தி 14 Jan 2023 4:46 AM GMT (Updated: 14 Jan 2023 5:38 AM GMT)

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

லூதியானா, பஞ்சாப்:

ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.சந்தோக் சிங் சவுத்ரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி இன்று லுதியானாவில் ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார். அவர் நடந்து சென்றபோது மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்சில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெர்வித்து விட்டனர்.

காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார

காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

"எங்கள் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்..," என்று அவர் டுவீட் செய்துள்ளார்.


Next Story