பள்ளிக்கூட்டத்தில் ஆணுறைகள்... மதுபானம்...! மாணவிகளின் வகுப்பு அருகே படுக்கையறை- முதல்வர் கைது


பள்ளிக்கூட்டத்தில் ஆணுறைகள்... மதுபானம்...! மாணவிகளின் வகுப்பு அருகே படுக்கையறை- முதல்வர் கைது
x

மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழு பள்ளியில் படுக்கைகள், மதுபானம், ஆணுறைகள், ஆகியவை கண்டறியபட்டது.

போபால்

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில், பள்ளிக்கூட அதிபரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அப்பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழு பள்ளியில் படுக்கைகள், மதுபானம், ஆணுறைகள், முட்டைகள் அடுக்கும் தட்டுகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கண்டறியபட்டது.

இதுகுறித்து ஆய்வுக் குழுவின் உறுப்பினரும், மாவட்ட கலெக்டர் நிவேதிதா சர்மா கூறியதாவது:-

"காஸ் சிலிண்டர் மற்றும் உயர்ரக மது பாட்டில்கள் உட்பட பிற ஆட்சேபனைக்குரிய பொருட்கள் இருந்ததை நான் பார்த்தேன். போலீசார் முழு விஷயத்தையும் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணை காவல்துறையிடம் கோரப்பட்டுள்ளது.

"வழக்கமான ஆய்வுக்காக நாங்கள் அங்கு சென்றபோது, பள்ளியின் இரு மூலைகளும் உள்ளிருந்து எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டோம். அங்கு ஒரு அறையில் மது பாட்டில்கள், ஆணுறைகள் காணப்பட்டன. இது ஒரு முழுமையான குடியிருப்பு பகுதி போல இருந்தது.

இது ஒரு நபருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆனால் அங்கு வசித்து வந்த பலர் கட்டடத்தில் இருந்து வெளியே வந்தனர். இது ஒரு தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது"

"கட்டடத்தின் மற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டபோது, இந்தபகுதியில் ஏன் பொருத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆனால் முதல்வர் அங்கு தங்கவில்லை என்கிறார். ஆனால் அங்கு ஏன் 15 படுக்கைகள் உள்ளன. மிக முக்கியமாக, அந்த அறைக்கு ஏன் மாண்விகளின் வகுப்பறைகளுடன் நேரடி நுழைவு வாயில் உள்ளது.

உயர்ரக மதுபான பாட்டில்களும் அங்கு வைக்கபட்டு இருந்தது சட்டவிரோதமானது. ஆணுறைகள் உட்பட வேறு சில ஆட்சேபனைக்குரிய பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன," என்று அவர் மேலும் கூறினார்.

இதை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் பாதர் டைனசிஸ் ஆர்.பி., கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சனிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Next Story