நாசிக்: சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த 3 பேர் கைது


நாசிக்: சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த 3 பேர் கைது
x

மராட்டிய மாநிலம் நாசிக்கில் சடடவிரோதமாக வாள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக்கில் சட்டவிரோதமாக வாள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள அமர்தம் சாலையில் உள்ள காசிச்சி காதி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், 3 பேர் தங்கள் வீடுகளில் சட்டவிரோதமாக வாள் வைத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 7 ஆயிரம் மதிப்புள்ள 7 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இருந்து வாள்களை வாங்கி வந்து தங்கள் வீடுகளில் வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விபுல் அனில் மோர்,சேத்தன் ரமேஷ் கங்வானி, கணேஷ் ராஜேந்திர வகல்கர் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.


Next Story