சிவசேனா கூட்டணிக்கு தொடரும் சிக்கல்; மராட்டிய உயர்கல்வித்துறை மந்திரி உதய் சமந்த் ஏக்நாத் ஷிண்டே முகாமில் தஞ்சம்..!


சிவசேனா கூட்டணிக்கு தொடரும் சிக்கல்;  மராட்டிய உயர்கல்வித்துறை மந்திரி உதய் சமந்த் ஏக்நாத் ஷிண்டே முகாமில் தஞ்சம்..!
x

மராட்டிய மாநில உயர்கல்வித் துறை மந்திரி உதய் சமந்த். இன்று ஏக்நாத் ஷிண்டே முகாமில் சேர்ந்தார்.

கவுகாத்தி,

சிவசேனா தனது கொள்கைகளுக்கு முரணான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுடன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மராட்டிய மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வித் துறை மந்திரியாக உள்ள உதய் சமந்த். இன்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலை அடைந்து ஏக்நாத் ஷிண்டே முகாமில் சேர்ந்தார்.

இப்படி அடுத்தடுத்து தொடர் அரசியல் மாற்றங்களால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.


Next Story