உ.பி.யில் பயங்கரம்: கொய்யாப் பழம் திருடிய நபரை அடித்தே கொலை செய்த கொடூரம்!


உ.பி.யில் பயங்கரம்: கொய்யாப் பழம் திருடிய நபரை அடித்தே கொலை செய்த கொடூரம்!
x

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கொய்யாப்பழங்களை பறித்ததற்காக, ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு வேளாண் பண்ணையில் கொய்யாப்பழங்களை பறித்ததற்காக, ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் காலை வேளையில், காட்டுப்பகுதியில் காலைக்கடன் கழிப்பதற்காக சென்றுள்ளார். திரும்பி வரும்போது, அங்கிருந்த ஒரு தோட்டத்தில் விளைந்திருந்த சில கொய்யாப் பழங்களை பறித்துள்ளார்.

இதனை அங்கிருந்த இருவர் பார்த்துள்ளனர். உடனே அந்த நபரை பிடித்து அவரை கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அந்த நபர் சுயநினைவிழந்தார். பின் அவரை அங்கே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர்.

சிறிதுநேரம் கழித்து அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பலத்த காயம் காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அலிகார் கிராமத்தில் சண்டை நடந்ததாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு ஒரு போலீஸ் குழு விரைந்தது.

அதன்பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story