சாப்பாடு பரிமாறாததால் ஆத்திரம்; மனைவியை கொன்ற கணவன்


சாப்பாடு பரிமாறாததால் ஆத்திரம்; மனைவியை கொன்ற கணவன்
x

சம்பவம் நடந்த அன்று கணவன் - மனைவி இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

புதுடெல்லி,

புதுடெல்லி சுல்தான்பூரை சேர்ந்த நபர் வினோத் குமார் துபே (வயது 47). இவரது மனைவி சோனாலி (39 வயது). இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு திருமணமானது.

இதனிடையே, வினோத்த்திற்கும் அவரது மனைவி சோனாலிக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் - மனைவி இருவரும் இணைந்து மதுக்குடித்துள்ளனர். அப்போது, தனக்கு உணவு பரிமாறிமாறு சோனாலியிடம் வினோத் கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த சோனாலி கணவருக்கு உணவு பரிமாற மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வினோத் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வினோத் மதுபோதையில் இருந்த தனது மனைவியை தலையணையால் இருக்கு கொலை செய்துள்ளார். பின்னர் இரவு முழுவதும் உயிரிழந்த தனது மனைவி அருகேயே உறங்கியுள்ளார்.

பின்னர், காலை போதை தெளிந்ததும் எழுந்த வினோத் தனது மனைவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். போதையில் சோனாலியை கொலை செய்ததை உணர்ந்த வினோத் வீட்டில் இருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றார்.

இந்த சம்பம் குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story