டெல்லியில் முல்லைப்பெரியாறு கண்காணிப்புக்குழு கூட்டம்: தமிழக, கேரள பிரதிநிதிகள் பங்கேற்பு


டெல்லியில் முல்லைப்பெரியாறு கண்காணிப்புக்குழு கூட்டம்: தமிழக, கேரள பிரதிநிதிகள் பங்கேற்பு
x

கோப்புப்படம்

டெல்லியில் முல்லைப்பெரியாறு கண்காணிப்புக்குழு கூட்டத்தில், தமிழக, கேரள பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

புதுடெல்லி,

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக்குழுவின் 16-வது கூட்டம் குழுவின் தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேரள அரசு சார்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், 'முல்லைப்பெரியாறு அணையை ஒட்டிய பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு பேபி அணையின் கீழ் பகுதியில் 15 மரங்கள் இடையூறாக உள்ளன. இவற்றை வெட்டி அகற்ற அனுமதி வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

அதைப்போல அணைப்பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை கணக்கிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


Next Story