மும்பை: மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் கவுதம் அதானி சந்திப்பு


மும்பை: மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் கவுதம் அதானி சந்திப்பு
x

Image Courtesy: PTI 

கவுதம் அதானி மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

மும்பை,

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்துள்ளது. இருவரும் என்ன பேசி கொண்டனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் என இரண்டு பிரிவாக கட்சி உடைந்துள்ளது. மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் அதானி- உத்தவ் தாக்கரே சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story