திருமணத்திற்கு முன்பே துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட அனுமதி - வினோத கிராமம்...!


திருமணத்திற்கு முன்பே துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட அனுமதி - வினோத கிராமம்...!
x

திருவிழா நாளில் திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்று கூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர்.

ராய்பூர்,

நம் கலாச்சாரத்தைப் பொருத்தவரை திருமணம் வரை ஒரு பெண் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது தான் வழக்கம். அவளை திருமணம் செய்யும் கணவன் தான் முதல் ஆணாக அவளை தொட வேண்டும் என்பதுதான் கலாச்சாரம்.

நம் தேசம் பல்வேறு கலாச்சாரங்களால் நிரம்பியுள்ளது. அவை நாடு முழுவதும் உள்ள பழக்கவழக்கங்கள் சில சமூகங்களுக்கு பிரத்தியேகமானவை. இந்த பிரத்தியேக கலாச்சாரங்களில் சில வெளியில் உள்ளவர்களுக்கு அவதூறாக கூட தோன்றக்கூடிய நடைமுறைகளாக தெரியக்கூடும். ஆனால் சமூகத்தின் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் புனிதமான மற்றும் வழக்கமான பாரம்பரியமாக அவர்கள் கருதுகின்றனர். அத்தகைய பழங்குடிகளில் ஒன்று முரியா பழங்குடியாகும்,

இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்கள் நவீன உலகில் வாழ்ந்தாலும், இந்த பழங்குடி இனங்கள் தங்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர் என்றால் பூரிப்பாக உள்ளது.

அப்படி ஒரு தனித்துவமான பண்பாட்டு பழக்க வழக்கத்தை கொண்டவர்கள் தான், சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள். பொதுவாக நமது சமூகத்தில் காதலையே முழுமையாக ஏற்கும் பக்குவம் இல்லை. அப்படி இருக்க இந்த பழங்குடி மக்களோ, இளம் வயதினர் திருமணம் செய்யாமலேயே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே அவர்கள் பின்பற்றுகின்றனர் என்றால் வியப்பாக உள்ளது.

கவுக்டல் என்ற பாரம்பரியத்தை இந்த பழங்குடி மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் மூங்கிலால் ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகிறார்கள், இதை நகரங்களில் உள்ள இரவு விடுதிகளுடன் மாதிரி என ஒப்பிடலாம். இந்த மூங்கில் குடில் வீட்டில் தான் தங்கள் பாலியல் தேவை விருப்பத்தை அறிந்து கொள்ள அவர்களின் முன்னோர்கள் அனுமதிக்கிறார்கள்.

சம்பந்தபட்ட திருவிழா நாளில் திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்று கூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். அதன் பிறகு இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற, திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து விருப்பமானவர்களுடன் பாலியல் உறவை வைத்துக்கொள்கின்றனர்.

இரவு முழுவதும் ஒன்றாக கழிக்கும் இந்த வயது வந்த ஜோடிகள், தேவைப்பட்டால் அவர்களின் கூட்டாளர்களை மாற்றிக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு ஏழு நாட்கள் தொடரும் திருவிழா நிகழ்வு இறுதிக்குள் கண்டிப்பாக ஒரு ஜோடியை இவர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

ஆடிப்பாடி மகிழ்ந்து தங்கள் இணைக்கு இயற்கையாக உருவாக்கிய பரிசுகளை இவர்கள் வழங்கி இணையை தேர்வு செய்கின்றனர். உள்ளம் கவர்ந்த துணையை சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பத்துடன் தலையில் பூ வைத்து தனது திருமண விருப்பத்தை அறிவிக்கிறார். இவ்வாறு இவர்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்கின்றனராம்.


Next Story