உத்தரபிரதேசத்தில் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தையல்காரர் கைது


உத்தரபிரதேசத்தில் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தையல்காரர் கைது
x

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்துக்கு உட்பட்ட பரித்பூரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பரேலி,

நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதாவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா வெளியிட்ட சர்ச்சை கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பின.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்துக்கு உட்பட்ட பரித்பூரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

குறிப்பாக, நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பேன் என வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்ததாக பரித்பூர் போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் பரேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story