சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் திருமணம் செய்துகொண்டது - ஓவைசி


சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் திருமணம் செய்துகொண்டது - ஓவைசி
x

சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் திருமணம் செய்துகொண்டது என ஓவைசி தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பாய்வாடியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஓவைசி, பாஜக, சிவசேனா தடுக்கப்படும் என்பதற்காக சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஓவைசிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டனர். தேர்தலுக்கு பின் சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் திருமணம் செய்துகொண்டது. இந்த மூன்று கட்சிகளில் யார் மணப்பெண் என எனக்கு தெரியவில்லை' என்றார்.

மராட்டியத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story