வானில் பறவை மோதியதால் பெங்களூரு விமானம் தரையிறக்கம்


வானில் பறவை மோதியதால் பெங்களூரு விமானம் தரையிறக்கம்
x

கோப்புப்படம்

வானில் பறவை மோதியதால் பெங்களூரு விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.

காத்மாண்டு,

நேபாளம் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காத்மாண்டு நகரின் திருபுவன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்தது. நடுவானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு பறவை விமானம் மீது மோதியது.

அதைத்தொடர்ந்து அந்த விமானம் திருபுவன் விமான நிலையத்திற்கு மீண்டும் திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.


Next Story