அடுத்த மாதம் 25-ந்தேதி மும்பையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்..!


அடுத்த மாதம் 25-ந்தேதி மும்பையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 July 2023 10:59 PM GMT (Updated: 27 July 2023 11:02 PM GMT)

அடுத்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி நடைபெறுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்கான முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது.

இதில் முதற்கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின. 26 கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25 மற்றும் 26-ந்தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் உதவியுடன் நடைபெறும் இந்த கூட்டத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதன் மூலம் 'இந்தியா' கூட்டணியில் இல்லாத ஒரு கட்சி ஆளும் மாநிலத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story