நாட்டில் ஒருவரும் அரசி விக்டோரியாவோ, இளவரசரோ கிடையாது; சம்பித் பத்ரா பேச்சு


நாட்டில் ஒருவரும் அரசி விக்டோரியாவோ, இளவரசரோ கிடையாது; சம்பித் பத்ரா பேச்சு
x

நாட்டில், அவர்களை விசாரணை நடத்த கூடாது என கூறுவதற்கு ஒருவரும் அரசி விக்டோரியாவோ அல்லது இளவரசரோ கிடையாது என பா.ஜ.க. தலைவர் சம்பித் பத்ரா இன்று கூறியுள்ளார்.



புதுடெல்லி,



நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடத்தியது. இதன்படி மொத்தம் 30 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த‌து. ஆனால், தனது தாய் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்து கொள்வதற்கு ஏதுவதாக விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை, இன்று (திங்கள் கிழமை) விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இன்று மீண்டும் ஆஜராகிறார். காங்கிரசின் முன்னாள் தலைவர் வயநாடு எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என கூறி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று காங்கிரசின் மூத்த தலைவர்களும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

இதுபற்றி பா.ஜ.க. தலைவர் சம்பித் பத்ரா இன்று கூறும்போது, இந்த நாட்டில், அவர்களை விசாரணை நடத்த கூடாது என கூறுவதற்கு ஒருவரும் அரசி விக்டோரியாவோ அல்லது இளவரசரோ கிடையாது. சட்டம் அனைவருக்கும் சமம் என அவர் கூறியுள்ளார்.

ஊழலுக்காக ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுகின்றனர். நேஷனல் ஹெரால்டு ஊழல் வழியே நாட்டின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதில் ஒரு குடும்பத்தின் தொடர்பு மற்றும் ராகுல் காந்தியின் பங்கு பற்றி பொதுமக்களுக்கு தெரியும். ஊழல் நடைபெற்றால் விசாரணை நடைபெறும் என்பது இயற்கை என அவர் கூறியுள்ளார்.


Next Story