திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா வெற்றி..!


திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா வெற்றி..!
x

திரிபுரா மாநில முதல்-மந்திரி மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திரிபுரா,

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதல்-மந்திரி மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். திரிபுரா , நாகாலாந்து ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.


Next Story