கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஈஸ்வரப்பா திடீர் அறிவிப்பு


கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஈஸ்வரப்பா திடீர் அறிவிப்பு
x

சட்டசபை தேர்தலில் மகனுக்கும் டிக்கெட் கேட்டு வந்த நிலையில் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா திடீரென அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஈஸ்வரப்பா திடீர் அறிவிப்புகர்நாடக பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈசுவரப்பா. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் அவர் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை விவகாரத்தில் கமிஷன் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஈசுவரப்பா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் குற்றமற்றவர் என தெரியவந்தது. இதையடுத்து தனக் மீண்டும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் கடைசி வரை மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவே இல்லை. மந்திரி பதவி கிடைக்காததால், அவர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அரசியலை விட்டு விலகுவது குறித்து முக்கிய முடிவை அறிவிக்கவும் அவர் தயாானார். ஆனால் கட்சி மேலிடம் கூறியதை அடுத்து அவா் தனது முடிவை மாற்றி கொண்டார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தன்னுடன் தனது மகனுக்கும் டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் பா.ஜனதா, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்று உறுதியாக கூறியது. இந்த நிலையில் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.


Next Story