காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதில் இப்போது 3 அடுத்து 4 ஆக மாறும்: சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பேட்டி


காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதில் இப்போது 3 அடுத்து 4 ஆக மாறும்: சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பேட்டி
x

சத்தீஸ்கரின் திட்டங்கள் இமாச்சலத்தின் 10 வாக்குறுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கூறினார்.

ராய்பூர்,

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததையடுத்து, சத்தீஸ்கர் முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலுக்கு ராய்பூர் விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது. சத்தீஸ்கரின் திட்டங்கள் இமாச்சலத்தின் 10 வாக்குறுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளோம், அடுத்ததாக கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என்றார்.


Next Story