ஒமைக்ரான் பிஎப்.7 அச்சுறுத்தல்... நாடாளுமன்ற இரு அவைகளிலும் முகக்கவசம் அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்பு...!


ஒமைக்ரான் பிஎப்.7 அச்சுறுத்தல்... நாடாளுமன்ற இரு அவைகளிலும் முகக்கவசம் அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்பு...!
x

நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

புதுடெல்லி,

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் முகக்கவசம் அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்த நாடாளுமன்றத்தில் எந்த கொரோனா கட்டுப்பாடுகளும் இல்லா நிலையில் தற்போது மீண்டும் அவை உறுப்பினர்கள் முகக்கவசம் அணிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், உலக அளவில் அதிகரித்து வரக்கூடிய கொரோனா பரவல் குறித்து நாம் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்த நாட்டு மக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும். மேலும், அவைக்கு உள்ளேயும், வெளியேயும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதேபோன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் உறுப்பினர்களுக்கு வேண்டுகள் விடுத்தார்.


Next Story