டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மருத்துவர்கள் அறிவுரைப்படி ஜெய்ப்பூருக்கு செல்ல சோனியா காந்தி முடிவு


டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மருத்துவர்கள் அறிவுரைப்படி ஜெய்ப்பூருக்கு செல்ல சோனியா காந்தி முடிவு
x

டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை சோனியா காந்தி ஜெய்ப்பூரிலேயே தங்கியிருப்பார் எனவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. காற்றின் தரக்குறியீடு 375 என மிக மோசமான நிலையில் இருப்பதால் வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களும் டெல்லியில் நிலவும் காற்று மாசுவால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை ஜெய்ப்பூரிலேயே சோனியா காந்தி தங்கியிருப்பார் எனவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மருத்துவர்கள் அறிவுறுத்தலை ஏற்று சோனியா காந்தி ஜெய்ப்பூருக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை அக்கட்சி வகுத்து வருகிறது. அனல் பறக்கும் பிரசாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், சோனியா காந்தி ஜெய்ப்பூரில் தங்க இருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது.


Next Story