நாடாளுமன்ற வளாகம்: இரவிலும் போராட்டத்தை தொடர்ந்த எம்.பி.க்கள் - இன்றும் நடைபெறும் என அறிவிப்பு


நாடாளுமன்ற வளாகம்: இரவிலும் போராட்டத்தை தொடர்ந்த எம்.பி.க்கள் - இன்றும் நடைபெறும் என அறிவிப்பு
x

Image Courtacy: PTI

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்றும் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று காலையில் போராட்டத்தை தொடங்கினர்.

பின்னர் மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் நேற்று இரவு முழுவதும் நீடித்தது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மாறி மாறி இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்றனர். குறிப்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங் எம்.பி. இரவு முழுவதும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 20 பேர் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் 50 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி இருந்தனர்.

இதைப்போல மீண்டும் ஒரு போராட்டத்தை அவர்கள் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story