நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு
x
தினத்தந்தி 18 Sep 2023 5:54 AM GMT (Updated: 18 Sep 2023 9:05 AM GMT)

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவுசெய்துள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று காலை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story