புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பு


புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பு
x

கோப்புப்படம்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

கொல்கத்தா,

புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி 2020, டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சுமார் 888 பேர் வரையும் , மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான பேர் அமரும் வகையிலும், இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி, வரும் 28-ம் தேதி புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி மதியம் 12 மணியளவில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா முன்னிலையில் திறந்து வைக்கிறார். இதற்கான பிரமாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு வுிடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், "மே 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்திலோ அல்லது குடியரசு தினத்திலோ அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ இந்த விழா நடந்திருக்க வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தனது டுவிட்டரில், "பாராளுமன்றம் என்பது புதிய கட்டிடம் மட்டுமல்ல; இது பழைய மரபுகள், மதிப்புகள், முன்னுதாரணங்கள் மற்றும் விதிகள் கொண்ட ஒரு ஸ்தாபனம் - இது இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். பிரதமர் மோடிக்கு அது புரியவில்லை

அவரைப் பொறுத்தவரை, புதிய கட்டிடத்தின் ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா என்பது நான், நான், என்னைப் பற்றியது. எனவே எங்களையும் எண்ணுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதுவரை, திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மட்டுமே பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.


Next Story