எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் இலச்சினை - வெளியான முக்கிய அறிவிப்பு


எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் இலச்சினை - வெளியான முக்கிய அறிவிப்பு
x

இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை (லோகோ) இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது

மும்பை,

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணி அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் நேற்று தொடங்கியது. மும்பையில் 2-வது நாளாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இன்று இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை (லோகோ) இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் லோகோ இன்று வெளியிடப்படாது தகவல் வெளியாகியுள்ளது.

இலச்சினையைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது. ஆனால் அந்த லோகோவில் சில மாற்றங்களை ஏற்படுத்த சில கட்சிகள் பரிந்துரை செய்திருப்பதாகவும் , லோகோ இன்று வெளியிடப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story