பிரான்சில் இருந்து கடைசி ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது


பிரான்சில் இருந்து கடைசி ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது
x

பிரான்சில் இருந்து கடைசி ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்ததுள்ளது.

புதுடெல்லி,

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, 36 ரபேல் விமானங்களில் முதல்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. அவை அரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் ஒவ்வொரு தொகுப்பாக விமானங்கள் அனுப்பப்பட்டன. இதுவரை 35 விமானங்கள் வந்துள்ள நிலையில், கடைசி மற்றும் 36-வது ரபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.

பிரான்சில் இருந்து புறப்பட்ட விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிய பின்னர் இன்று பிற்பகல் வந்தடைந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.


Next Story