பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!


பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!
x

பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரோஸ்பூர்,

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள நெல் வயலில் இருந்து பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்கப்பட்ட ஆளில்லா விமானம் குவாட்காப்டர் (டிஜேஐ மெட்ரிஸ் 300 ஆர்டிகே) ஆகும். ஆளில்லா விமானம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், அமிர்தசரசில் உள்ள ஒரு கிராமத்தின் புறநகரில் இருந்து பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story