ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு விடுத்த கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய ராணுவ அதிகாரிகள்!


ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு விடுத்த கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய ராணுவ அதிகாரிகள்!
x

கேரளாவில் வசிக்கும் ஒரு புதுமண தம்பதியினர் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள ராணுவத்தினரை அழைத்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வசிக்கும் ஒரு புதுமண தம்பதியினர் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள ராணுவத்தினரை அழைத்துள்ளனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராகுலுக்கும் கார்த்திகாவுக்கும் நவம்பர் 10ம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள ராணுவத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தனர். எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று திருமண அழைப்பிதழில் எழுதப்பட்டிருந்தது.

இதனுடன், கையால் எழுதப்பட்ட குறிப்பையும் அனுப்பியுள்ளனர். இதில், நாட்டின் மீது ராணுவம் கொண்டுள்ள அன்பு, உறுதியான உறுதிப்பாடு மற்றும் தேசபக்திக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து புதுமணத் தம்பதிகள் பாங்கோடு ராணுவ நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். தம்பதியருக்கு பாங்கோடு ராணுவ நிலையம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு திங்கள்கிழமை பாங்கோடு ராணுவ நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்டேஷன் கமாண்டர் பிரிகேடியர் லலித் சர்மா அவர்களை கவுரவித்தார். தனது திருமணத்திற்கு ராணுவத்தினரை அழைத்துள்ளதை அவர் பாராட்டினார். தம்பதிகளுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.



Next Story