2004-2021 வரை தேசிய கட்சிகள் அறியப்படாத மூலங்களிலிருந்து ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளன- அறிக்கை


2004-2021 வரை தேசிய கட்சிகள் அறியப்படாத மூலங்களிலிருந்து ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளன- அறிக்கை
x

கோப்புப்படம் 

2004-05 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு இடையில், தேசிய கட்சிகள் ரூ. 15,077.97 கோடியை அறியப்படாத மூலங்களிலிருந்து வசூலித்துள்ளன.

புதுடெல்லி,

தேசிய கட்சிகள் 2004-05 மற்றும் 2020-21 க்கு இடையில் தெரியாத மூலங்களிலிருந்து ரூ.15,077.97 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன என்று தேர்தல் உரிமை அமைப்பு அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டிற்கான அறியப்படாத மூலங்களிலிருந்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ. 690.67 கோடியாக உள்ளது.

தேசியக் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் இந்திய கம்யூனிட்டி கட்சி (மார்க்சிஸ்ட்) தேசியவாத காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

கட்சிகளின் வருமான வரி கணக்குகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட நன்கொடை அறிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், 2004-05 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு இடையில், தேசிய கட்சிகள் ரூ. 15,077.97 கோடியை அறியப்படாத மூலங்களிலிருந்து வசூலித்துள்ளன.

2020-21 நிதியாண்டில், எட்டு தேசிய அரசியல் கட்சிகள் அறியப்படாத மூலங்களிலிருந்து ரூ. 426.74 கோடி வருமானத்தை பெற்றுள்ளன. மேலும் 27 பிராந்தியக் கட்சிகள் அறியப்படாத மூலங்களிலிருந்து ரூ. 263.928 கோடி வருமானத்தைப் பெற்றுள்ளன," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

2020-21 நிதியாண்டில், தெரியாத மூலங்களிலிருந்து ரூ 178.782 கோடி வருமானம் என்று காங்கிரஸ் அறிவித்தது, இது தேசியக் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 41.89 சதவீதம் (ரூ. 426.742 கோடி)" என்று அறிக்கை கூறியது.

தெரியாத மூலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் ரூ. 100.502 கோடி என்று பாஜக அறிவித்தது, இது தேசியக் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 23.55 சதவீதமாகும்.

அறியப்படாத வருமானத்தின் அடிப்படையில் முதல் ஐந்து பிராந்தியக் கட்சிகள் ஒய்.எஸ்.ஆர்.-காங்கிரஸ் ரூ. 96.2507 கோடி, திமுக ரூ.80.02 கோடி, பி.ஜே.டி.ரூ. 67 கோடி, எம்.என்.எஸ்.ரூ. 5.773 கோடி மற்றும் ஏ.ஏ.பி.ரூ.5.4 கோடி என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story