"மக்கள் பீதியடைய வேண்டாம்" "காரைக்காலில் காலரா பாதிப்பு குறைந்துள்ளது" - தமிழிசை சௌந்தரராஜன்


மக்கள் பீதியடைய வேண்டாம் காரைக்காலில் காலரா பாதிப்பு குறைந்துள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்
x
கோப்புப்படம் 

காரைக்காலில் காலரா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாக கூறிய புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கு காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை சுத்தம் செய்து பீளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில், காரைக்காலில் காலரா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதாக கூறிய புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார், மேலும். மக்கள் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story