சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படம் - இஸ்ரோ வெளியீடு


சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படம் - இஸ்ரோ வெளியீடு
x

சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பெங்களூரு,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது. தற்போது ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது.

ChaSTE, RAMBHA-LP, ILSA கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமியில் பெறப்பட்டதாகவும் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22-ந்தேதி செயல்பட தொடங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (DFSAR) கருவி, சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.


Next Story