பாட்னா: எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் 3 மணி நேரத்திற்கும் மேலாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை


பாட்னா: எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் 3 மணி நேரத்திற்கும் மேலாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை
x

பீகார் தர்பங்கா அருகே ஷங்கர்பூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாட்னா,

பீகாரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி எப் ஐ) அமைப்புடன் தொடர்புடைய சிலர் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பது குறித்த தகவலின் பேரில் பீகார் போலீசார் தலைநகர் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரீப் பகுதியில் சிலரை தகுந்த ஆதாரங்களுடன் சமீபத்தில் கைது செய்தனர். இந்த வழக்கை இப்போது என்ஐஏ விசாரிக்கிறது.

பீகார் தர்பங்கா அருகே ஷங்கர்பூரில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புல்வாரி ஷெரீப் வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி எப் ஐ) அமைப்புடன் தொடர்பு பற்றி என்ஐஏ விசாரிக்கிறது.

இந்த சோதனை நடக்கும் இடங்கள் அனைத்தும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களாகும். இன்று காலை முதலே தொடங்கிய சோதனை, 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதுவரை பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story